tamiltraditional.cf

Home | Sign Up | Log In
வெள்ளி, 2024-05-10, 4:37 PM
Welcome Guest | RSS
Site menu
Section categories
மருத்துவம் [70]
தமிழ் மொழி [111]
சிறுவர் உலகம் [51]
பெண்கள் உலகம் [3]
யோகாசனம் [45]
யோகாசனம்
தமிழ்மொழி
உடல்நலம்
சிறுவர் உலகம்
பெண்கள் உலகம்
Home » Files [ Add new entry ]

Total entries in catalog: 280
Shown entries: 41-50
Pages: « 1 2 3 4 5 6 7 ... 27 28 »

181. அறன்கூறான் அல்ல செயினும் ஒருவன்

புறங்கூறான் என்றல் இனிது.

* அறச்செயல் செய்யாதவன் ஆயினும், புறம் பேசாதவன் என்றால் நல்லதே.

திருக்குறள் | Views: 476 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

171. நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்.

* நடுநிலை இன்றி தனக்குரிமை இல்லாத பொருளுக்கு ஆசைப்பட்டால், குடிப் பெருமை கெட்டு பழியை சுமக்க நேரும்.

திருக்குறள் | Views: 407 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு.

* மனதில் பொறாமை இல்லாத இயல்பை ஒரு ஒழுக்கமாகப் பேண வேண்டும்

திருக்குறள் | Views: 340 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

* தன்னை தோண்டுபவரைத் தாங்கும் நிலம் போல, நம்மை இகழ்பவரைப் பொறுத்தல் நன்று.

திருக்குறள் | Views: 464 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

141. பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து

அறம்பொருள் கண்டார்கண் இல்.

* அறநெறியில் தேர்ந்தவர்களிடம் பிறன் மனையை கைக் கொள்ளும் மடம் இருக்காது.

 

திருக்குறள் | Views: 366 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

131. ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

* பெருமைக்குரிய ஒழுக்கத்தை கடைபிடிப்பது உயிரினும் உயர்ந்ததாகக் கொள்ளப் படும்.

திருக்குறள் | Views: 487 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

121. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்.

* அடக்கம் என்னும் உயரிய குணம் ஒருவருக்கு சுவர்க்கத்தை அளிக்கும், அடக்கமின்மையோ கொடிய நரகத்தில் சேர்த்துவிடும்.

திருக்குறள் | Views: 390 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

111. தகுதி எனவொன்று நன்றே பகுதியால்

பாற்பட்டு ஒழுகப் பெறின்.

* எவர் பக்கமும் பரிந்து நோக்காமல் இருத்தலே, நடுநிலையாளரின் தகுதி.

திருக்குறள் | Views: 402 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

101. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்ற லரிது.

* தானாக முன் வந்து செய்யும் உதவிக்கு ஈடான செயல் இரு உலகங்களிலும் அரிது.

திருக்குறள் | Views: 421 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

91. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

* ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.

திருக்குறள் | Views: 319 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

Log In
Block title
Search
Polls
Rate my site
Total of answers: 49
live traffic feed

Copyright MyCorp © 2024 | Make a free website with uCoz