tamiltraditional.cf

Home | Sign Up | Log In
திங்கள், 2024-05-06, 1:29 PM
Welcome Guest | RSS
Site menu
Section categories
தமிழர் வரலாறு [57]
மருத்துவ குணம் [20]
திருக்குறள் [34]
யோகாசனம்
தமிழ்மொழி
உடல்நலம்
சிறுவர் உலகம்
பெண்கள் உலகம்
Home » Files » தமிழ் மொழி » திருக்குறள் [ Add new entry ]

Entries in category: 34
Shown entries: 21-30
Pages: « 1 2 3 4 »

Sort by: Date · Name · Rating · Comments · Downloads · Views

131. ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

* பெருமைக்குரிய ஒழுக்கத்தை கடைபிடிப்பது உயிரினும் உயர்ந்ததாகக் கொள்ளப் படும்.

திருக்குறள் | Views: 487 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

121. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்.

* அடக்கம் என்னும் உயரிய குணம் ஒருவருக்கு சுவர்க்கத்தை அளிக்கும், அடக்கமின்மையோ கொடிய நரகத்தில் சேர்த்துவிடும்.

திருக்குறள் | Views: 390 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

111. தகுதி எனவொன்று நன்றே பகுதியால்

பாற்பட்டு ஒழுகப் பெறின்.

* எவர் பக்கமும் பரிந்து நோக்காமல் இருத்தலே, நடுநிலையாளரின் தகுதி.

திருக்குறள் | Views: 402 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

101. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்ற லரிது.

* தானாக முன் வந்து செய்யும் உதவிக்கு ஈடான செயல் இரு உலகங்களிலும் அரிது.

திருக்குறள் | Views: 421 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

91. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

* ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.

திருக்குறள் | Views: 318 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

81. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.

* இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.

திருக்குறள் | Views: 485 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

71. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்.

* உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.

திருக்குறள் | Views: 400 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

61. பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பெறு அல்ல பிற.

* அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவும் இல்லை.

 

திருக்குறள் | Views: 481 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

51. மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

* இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்.

திருக்குறள் | Views: 474 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

41. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை.

* பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.

திருக்குறள் | Views: 403 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

Log In
Block title
Search
Polls
Rate my site
Total of answers: 49
live traffic feed

Copyright MyCorp © 2024 | Make a free website with uCoz