-
அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
-
அகல உழுகிறதை விட ஆழ உழு.
-
அகல் வட்டம் பகல் மழை.
-
அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
-
அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
-
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
-
அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
-
அடக்கமே பெண்ணுக்கு அழகு.
-
அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
-
அடாது செய்தவன் படாது படுவான்.
-
அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
-
அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
-
அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும். அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது. அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
-
அந்தி மழை அழுதாலும் விடாது.
-
அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
-
அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
-
அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.
-
அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
-
அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
-
அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
-
அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
-
அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
-
அழுத பிள்ளை பால் குடிக்கும்.
-
அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
-
அளக்கிற நாழி அகவிலை அறியுமா? அறச் செட்டு முழு நட்டம் .
-
அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
-
அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
-
அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
-
அறமுறுக்கினால் அற்றும் போகும்.
-
அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
-
அறிய அறியக் கெடுவார் உண்டா? அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
-
அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
-
அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
-
அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
-
அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
-
அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும்.
-
அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
-
அற்ப அறிவு அல்லற் கிடம். அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
-
அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா? அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
-
அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
-
அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?
-
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
-
இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
-
இஞ்சி இலாபம் மஞ்சளில்.
-
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
-
இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.
-
இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
-
இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
-
இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
-
இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
-
இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
-
இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
-
இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை இராச திசையில் கெட்டவணுமில்லை இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
-
இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
-
இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
-
இருவர் நட்பு ஒருவர் பொறை.
-
இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
-
இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
-
இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
-
இளங்கன்று பயமறியாது இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
-
இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
-
இறங்கு பொழுதில் மருந்து குடி இறுகினால் களி , இளகினால் கூழ்.
-
இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
-
இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.
-
இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.
-
ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
-
ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
-
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
-
ஈர நாவிற்கு எலும்பில்லை.
உ, ஊ
-
உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
-
உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
-
உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
-
உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
-
உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
-
உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
-
உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
-
உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
-
உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
-
உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
-
உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
-
உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
-
உலோபிக்கு இரட்டை செலவு.
-
உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
-
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
-
உளவு இல்லாமல் களவு இல்லை.
-
உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல
-
உள்ளது போகாது இல்லது வாராது.
-
உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய
-
உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்
-
உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]
-
ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
-
ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.
-
ஊண் அற்றபோது உடலற்றது.
-
ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
-
ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
-
ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.
எ, ஏ
-
எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ?
-
எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
-
எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
-
எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
-
எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?
-
எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
-
எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
-
எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
-
எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
-
எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
-
எண்ணை முந்துதோ திரி முந்துதோ? எதார்த்தவாதி வெகுசன விரோதி.
-
எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
-
எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
-
எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
-
எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.
-
எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா
-
எய்தவன் இருக்க அம்பை நோவானேன்
-
? எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
-
எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்.
-
எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
-
எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
-
எலி அழுதால் பூனை விடுமா?
-
எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
-
எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
-
எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.
-
எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
-
எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?
-
எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
-
எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்
-
எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
-
எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
-
எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
-
எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும் எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
-
எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
-
எறும்பு ஊர கல்லுந் தேயும்.
-
எறும்புந் தன் கையால் எண் சாண் ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை
-
ஏரி நிறைந்தால் கரை கசியும்.
-
எருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
-
ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
-
ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை
-
ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும்.
-
ஏழை என்றால் எவர்க்கும் எளிது ஏழைபேச்சு அம்பலம்
-
ஏறாது ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
ஐ, ஒ, ஓ, ஒள
-
ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
-
ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
-
ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா?
-
ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
-
ஓதிய மரம் தூணாமோ,
-
ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
-
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
-
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
-
ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
-
ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
-
ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
-
ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
-
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
-
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்
-
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
-
ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
-
ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
-
ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
-
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
-
ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!
-
ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
-
ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
-
ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
-
ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
-
ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
-
ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
-
ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
-
ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
-
ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
-
ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
க
-
கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?
-
கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
-
கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
-
கடலைத் தாண்ட ஆசையுண்டு
-
கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
-
கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
-
கடல் திடலாகும், திடல் கடலாகும்.
-
கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
-
கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
-
கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.
-
கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.
-
கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
-
கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
-
கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
-
கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
-
கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.
-
கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
-
கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
-
கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
-
கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.
-
கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
-
கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
-
கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
-
கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.
-
கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
-
கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
-
கண் கண்டது கை செய்யும்.
-
கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா? கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
-
கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
-
கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
-
கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
-
கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
-
கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.
-
கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
-
கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.
-
கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி,
-
கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி