பழமொழிஎன்றால் பழமையான மொழி, பழம் போல் இனிக்கும் பொன்மொழி என்று கொள்ளலாம்.தொன்று தொட்டு நம் முன்னோர்கள் தங்கள் அநுபவத்தால் உணர்ந்த உண்மைகளைஉலகத்தோர் உணரும் பொருட்டு சுருங்கக் கூறி விளங்க வைக்கும் விதத்தில்உதிர்த்த வாய் மொழிகள் பிறருக்கு வழிகாட்டியாக விளங்கியதால் அவை பழமொழி,பொன்மொழி என்று அம்மொழிகளின் பொருளை உணர்ந்து அவற்றின் யதார்த்ததைஅனுபவித்தவர் கூறினர். பழமொழிப் பட்டியல்
(1) ஒன்று பட்டால் உண்டு வாழ்வு (2) கூடி வாழ்ந்தால் கோடி நன்மை (3) ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் (4) வேண்டாப் பொண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் (5) காற்றுள்ள போதே தூற்றிக்கொள் (6) அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் (7) அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் (8) அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் (9) அடியாத மாடு படியாது (10) குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை (11) தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை (12) தந்தை சொல் மிக்க மந்திரமில்லை (13) எரியும் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி? (14) வரவு எட்டணா செலவு பத்தணா (15) அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு (16) ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும் (17) கிட்டாதாயின் வெட்டென மற (18) ஆறிலும் சாவு நூறிலும் சாவு (19) சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டு (20) இக்கரைக்கு அக்கரை பச்சை (21) ஓரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் (22) ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை (23) ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் (24) ஆதாயமில்லாமல் வியாபாரி ஆற்றோடு போகமாட்டான் (25) யானைக்கும் அடி சறுக்கும் (26) ஊருடன் ஒட்டி வாழ் (27) பதறாத காரியம் சிதறாது (28) கூழானாலும் குளித்துக் குடி (29) கந்தையானாலும் கசக்கிக் கட்டு (30) நல்ல மாட்டிற்கு ஒரு சூடு நல்ல மனிதனுக்கு ஒரு வார்த்தை (31) ஆடையில்லாதவன் அரை மனிதன் (32) ஆழம் தெரியாமல் காலை விடாதே (33) ஆடிப் பட்டம் தேடி விதை (34) ஆட மாட்டாத நடன மாதிற்குக் கூடம் கோணலாம் (35) ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் (36) அறுக்க மாட்டாதவன் கையில் ஐம்பத்தெட்டு அறிவாள் (37) விலை மோரில் வெண்ணெய் எடுப்பவன் (38) மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதே (39) வழுக்கி விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை (40) தலைவலியும் தரித்திரமும் தனக்கு வந்தால் தான் தெரியும் (41) நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் (42) பானை பிடித்தவள் பாக்கியசாலி (43) விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா? (44) தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான் (45) மனமிருந்தால் மார்க்கமுண்டு (46) ஓருவனுக்கு ஒருத்தி (47) தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன (48) காமாலைக் காரனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் (49) கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை (50) காஞ்சிபுரம் போனால் காலாட்டி சாப்பிடலாம் (51) போகாத ஊருக்கு வழி எது (52) சாண் ஏறினால் முழம் வழுக்கும் (53) தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலிருக்க மாட்டான் (54) கொட்டினாள் தேள் கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சி (55) ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி (56) தடி எடுத்தவன் தண்டக்காரன் (57) உதைப்பானுக்கு வெளுப்பான் சலவைக்காரன் (58) பக்கம் பார்த்துப் பேசு (59) வெளுத்ததெல்லாம் பாலல்ல (60) மாமியார் உடைத்தால் மண் கலம் மருமகள் உடைத்தால் பொன் கலம் (61) வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ (62) நாய் வாலை நிமிர்த்த முடியாது (63) குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு (64) தனக்கு மிஞ்சித் தான் தருமம் (65) ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு (66) ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுப்பதில்லை (67) வெட்டு ஒன்று துண்டிரண்டு (68) சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடி (69) சிறு துளி பெரு வெள்ளம் (70) வருமுன் காப்பதறிவு (71) கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா? (72) விளையும் பயிர் முளையிலே தெரியும் (73) முடி சான்ற மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவர் (74) மடியில் கனமிருந்தால் வழியில் பயம் (75) தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும் (76) பொறுத்தார் பூமியாள்வார் பொங்குவார் காடாள்வார் (77) தருமம் தலை காக்கும் (78) பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் (79) நோயிருக்கும் இடத்தில் தான் வைத்தியனுக்கு வேலை (80) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் (81) கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் (82) பனை மரத்தடியிலமர்ந்து பாலைக் குடித்தாலுள் கள்ளைக் குடித்ததாய்க் கொள்வார்கள் (83) யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் (84) மத்தளத்திற்கு இரு புறமும் இடி (85) கழுதைக்குத் தெரியுமா கற்பூற வாசனை? (86) சொறி பிடித்தவன் கை சும்மா இருக்காது (87) இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை (88) பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் (89) குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான் (90) ஓடும் நாயைக் கண்டால் துரத்தும் நாய்க்கு இளக்காரம் (91) குட்டுப் பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப் பட வேண்டும் (92) புத்திமானே பலவான் (93) கற்றுக் கொடுத்த பாடமும் கட்டிக் கொடுத்த சாதமும் நீண்ட நாள் வருவதில்லை (94) தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு (95) தானாடா விட்டாலும் சதையாடும் (96) ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் (97) உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? (98) எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடாதே (99) நல்லவனைப் போலிருப்பான் நடுச் சாமத் துரோகி (100) கல்லடிக்குத் தப்பினாலும் கண்ணடிக்குத் தப்பாது (101) நுணலும் தன் வாயால் கெடும் (102) அவுசாரி என்று யானை மேல் போகலாம், திருடி என்று தெருவில் போக முடியாது (103) தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் (104) வெயிலில் சென்றவனுக்குத் தான் நிழலின் அருமை புரியும் (105) கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும் (106) விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் (107) ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே (108) கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்காதே (109) உயிர் காப்பான் தோழன் (110) குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் (111) போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து (112) ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு (113) படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் (114) சிறு துரும்பும் பல் குத்த உதவும் (115) ஏழை என்றால் மோழையும் பாயும் (116) வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் (117) உதட்டில் உறவு உள்ளத்தில் பகை (118) ஆடு பகை குட்டி உறவா? (119) இளங்கன்று பயமறியாது (120) பேராசை பெரு நஷ்டம் (121) மின்னுவதெல்லாம் பொன்னல்ல (122) கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு (123) அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி (124) வெறுங்கை முழம் போடுமா? (125) குரைக்கிற நாய் கடிக்காது (126) பந்திக்கு முந்து படைக்குப் பிந்து (127) இனம் இனத்தோடு சேரும் (128) புயலுக்குப் பின்னே அமைதி (129) பாம்புக்குப் பால் வார்த்தாலும் நஞ்சைத்தான் கக்கும் (130) யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே (131) எறும்பு ஊறக் கல்லும் தேயும் (132) தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் (133) ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? (134) கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் (135) இரைக்கிற ஊற்றே சுரக்கும் (136) எலி வளையானாலும் தனி வளை (137) நிறைகுடம் தளும்பாது, குறைகுடம் கூத்தாடும் (138) பெண் என்றால் பேயும் இரங்கும் (139) யானைகொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் (140) கெடுவான் கேடு நினைப்பான் (142) அகத்தின் அழகு முகத்தில் தெரியும் (143) தோல்வியே வெற்றியின் முதல் படி (144) சர்க்கரை என்று சொன்னால் தித்திக்குமா (145) ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது (146) பழகப் பழகப் பாலும் புளிக்கும் (147) முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா? (148) பதறிய காரியம் சிதறும் (149) பசி வந்திடப் பத்தும் பறந்து போம் (150) நண்டு கொழுத்தால் வளையில் தங்காது (151) பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்ட மாட்டான் (152) பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி (153) வீட்டில் எலி வெளியில் புலி (154) உப்பிட்டவரை உள்ளளவும் நினை (155) உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதே (156) வாழு, வாழ விடு (157) எறிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம் (158) நாம் ஒன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கிறது (159) பணமில்லாதவன் பிணம் (160) கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை (161) பணம் பத்தும் செய்யும் (162) தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே (163) முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் (164) நெருப்பில்லாமல் புகையாது (165) ஜென்ம புத்தி செருப்பாலடித்தாலும் போகாது (166) பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் (167) தனி மரம் தோப்பாகாது (168) ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் (169) ஏழை சொல் அம்பலம் ஏறாது (170) பூசனிக்காய் போவது தெரியாது, கடுகுக்குக் காதை அறுத்துக் கொள்வான் (171) சித்திரமும் கைப்பழக்கம் (172) வெள்ளம் வருமுன் அணை போடு (173) தன் கையே தனக்குதவி (174) பருவத்தே பயிர் செய் (175) பிள்ளையையுள் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டாதே (176) கொழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகிவிடாது (177) வேலியே பயிரை மேய்ந்தால் விளைவு என்ன? (178) அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் (179) துள்ளுகிற மாடு பொதி சுமக்காது (180) தன்னைப்போல் பிறரை நினை (182) ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது (183) காலமும் கடலலையும் காத்திருக்காது (184) இறந்த காலத்தை என்றும் பெற இயலாது (185) கொல்லன் பட்டறையில் ஊசி விற்கலாமா? (186) இளமையில் கல் நீ அனுபவி -- அது தான் ஞானம். பிறரை அனுபவிக்கச் செய்--அது தான் தர்மம். ---பெர்சீன் பழ்மொழி. உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள்; பணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள். உப்பு விளைவதும் தண்ணீரிலே, கரைவதும் அதிலேயேதான். ஜலதோஷத்திற்குச் சாப்பாடு போடுங்கள்; ஜுரத்திற்கு பட்டினி போடுங்கள். கனவுகளை நேசியுங்கள். ஆனால்- நிஜத்தோடு நெருங்கி வாழுங்கள். கந்தலானாலும் அதிகமாக கசக்காதீங்க, மேலும் கந்தலாகும். வளமான் காலத்தில் நண்பர்கள் நம்மை தெரிந்து கொள்கிறார்கள். வறுமை காலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்துகொள்கிறோம். அகத்தினழகு முகத்தில் தெரியும்.
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
அடியாத மாடு படியாது.
அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.
அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
ஆழம் தெரியாமல் காலை விடாதே.
ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.
ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
ஆனைக்கும் அடிசறுக்கும்.
இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
எறும்பூரக் கல்லும் தேயும்.
ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.
கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.
கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
கழுதை அறியுமா கற்பூர வாசனை?
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.
காகம் திட்டி மாடு சாகாது.
காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.
குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே கொப்பிலே தாவுமாம்.
குரைக்கிற நாய் கடிக்காது.
கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.
சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?
தடியெடுத்தவன் தண்டக்காரன்.
தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
தன் வினை தன்னைச் சுடும்.
தனிமரம் தோப்பாகாது.
தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.
தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.
நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?
நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.
நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
நிறைகுடம் தளம்பாது.
பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.
பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.
பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.
புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.
பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.
முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
விரலுக்குத் தக்கதே வீக்கம்.
விளையும் பயிரை முளையிலே தெரியும்.
வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
வெளுத்ததெல்லாம் பாலல்ல.
வேலிக்கு ஓணான் சாட்சி.
வைக்கோற் போர் நாய் போல
|