'சோறு' என்ற சொல் அநாகரிகமான சொல்லாகிப் பல்லாண்டுகளாகிவிட்டன ...See More
2012-12-14, 2:37 AM
தமிழ் குறையும் நல்லுலகை மன்னிக்கவும் தமிழ் கூறும் நல்லுலகை நினைத்துப் பார்த்தேன்! 'சோறு' என்ற சொல் அநாகரிகமான சொல்லாகிப் பல்லாண்டுகளாகிவிட்டன. உணவகங்களில், " கொஞ்சம் ரைஸ் வைங்க", "சாப்பாடு தயார்" , "சாப்பாடு இருக்கா?" என்பன போன்ற உரைகளைத் த ான் கேட்க முடியும்!
சாப்பாடு என்பது நாகரிகம் என்றும், ரைஸ் என்பது அதிநாகரிகம் என்றும் சோறு என்பது அநாகரிகம் என்றும் ஆழப் பதிந்துவிட்டன நம்மவர்களது மனங்களில்!! பண்டைய காலம் தொட்டே சோறு தமிழர்களின் வாழ்வின் ஒரு அங்கமாக இருந்து வந்துள்ளது. பல புராணங்களிலும் சோறு என்ற சொல் வெகுவாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
"சுத்தம் சோறு போடும்"
"சோழநாடு சோறுடைத்து"
"தேடிச் சோறு நிதந் தின்று"
"வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்"
என்பன போன்ற வரிகளை நினைத்து இன்புறலாம்.
"சோறுண்டான், சோறள்ளித்தின்றான், சோறும் குழம்பும் சுவையாய் இருந்தன".இவற்றையெல்லாம் சொல்லிப்பாருங்கள்! சொல்லவே சுவை பெருகும்!!
"உமிகொண் டரிசி துறப்பான் - தமிழின் உலகப் பெருமை மறப்பான். தமிழா உன்றன் தலைவிதி மாற்றத் தரணியில் எவனினிப் பிறப்பான்?"