|
| | |
|
தெரிந்துக் கொள்வோம் - துளசி...See More
| 2013-03-03, 1:08 PM |
அனைவரது வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய ஒரு மூலிகைச்செடி துளசி. 1) இதன் வேறு பெயர்கள்: துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி 2) இனங்கள்: நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்) 3) தாவரப்பெயர்கள்: Ocimum, Sanctum, Linn Lamiaceae, Labiatae (Family)
4) வளரும் தன்மை: வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண்,
களி கலந்த மணற்பாங்கான இருமண், பாட்டு நிலம் தேவை. கற்பூரமணம் பொருந்திய
இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும்
தானே வளர்கின்றது. துளசியின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார்
தீவுக்கும் பரவியுள்ளது. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள்
மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். மண்ணில் கார அமில நிலை 6.5 - 7.5 வரை
இருக்கலாம். வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிரிகி. 5) பயன் தரும் பாகங்கள்: இலை, தண்டு, பூ, வேர் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை.
6) பயன்கள்:- தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம்,
மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்கள். துளசியின்
கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம். இருமல், சளி, ஜலதோசம்
மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும்,
பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது. துளசி நம்
உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற
வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது. வியர்வையை அதிகமாகப் பெருக்கக்
கூடிய குணமும் இதற்கு உண்டு. இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக
துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில்
ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால்
அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.
இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறு 5மி.லி. காலை, மாலை
சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும். இதயம் கல்லீரல் ஆகியவற்றை
பலப்படுத்தும். சளியை அகற்றும், தாய்பாலை மிகுக்கும். இலை கதிர்களுடன்
வாட்டி பிழிந்த சாறு காலை மாலை 2 துளி வீதம் காதில் விட்டு வர 10 நாட்களில்
காது மந்தம் தீரும். விதைச் சூரணம் 5 அரிசி எடை தாம்பூலத்துடன் கொள்ள தாது
கட்டும். மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து
வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது. தொண்டையில் புண்
ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல
பலன் கிடைக்கும். பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து
அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து
ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும். துளசி இலையை
இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள
இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை
பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை
கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள்
வராது. துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக
சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின்
அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. எளிமையான
கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில்
15 கிராம் அளவு ஆண், பெண் இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு
மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது. குணமாகும் வியாதிகள். 1. உண்ட விஷத்தை முறிக்க. 2. விஷஜுரம்குணமாக. 3. ஜன்னிவாத ஜுரம் குணமாக. 4. வயிற்றுப்போக்குடன் இரத்தம் போவது நிற்க. 5. காது குத்துவலி குணமாக. 6. காது வலி குணமாக. 7. தலைசுற்றுகுணமாக. 8. பிரசவ வலி குறைய. 9. அம்மை அதிகரிக்காதிருக்க. 10. மூத்திரத் துவாரவலி குணமாக. 11. வண்டுகடி குணமாக. 12. வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக. 13. எந்த வியாதியும் உண்டாகமலிருக்க. 14. தோல் சம்பந்தமான நோய் குணமாக. 15. மின்சாரம் தாக்கியவரைக் காப்பாற்ற. 16. அஜீரணம் குணமாக. 17. கெட்டரத்தம் சுத்தமாக. 18. குஷ்ட நோய் குணமாக. 19. குளிர் காச்சல் குணமாக. 20. மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக. 21. விஷப்பூச்சியின் விஷம் நீங்க. 22. பாம்பு விஷத்தை முறித்து உயிர்பிழைக்க. 23. காக்காய்வலிப்புக் குணமாக. 24 .ஜலதோசம் குணமாக. 25. ஜீரண சக்தி உண்டாக. 26. தாதுவைக் கட்ட. 27. சொப்பன ஸ்கலிதம் குண்மாக. 28. இடிதாங்கியாகப் பயன்பட 29. தேள் கொட்டு குணமாக. 30. சிறுநீர் சம்பந்தமான வியாதி குணமாக. 31. கண்ணில் விழுந்த மண்,தூசியை வெளியேற்ற. 32. வாதரோகம் குணமாக. 33. காச்சலின் போது தாகம் தணிய. 34. பித்தம் குணமாக. 35. குழந்தைகள் வாந்தியை நிறுத்த. 36. குழந்தைகள் வயிற்றுப் போக்கை நிறுத்த. 37. சகல விதமான வாய்வுகளும் குணமாக. 38. மாலைக்கண் குணமாக. 39. எலிக்கடி விஷம் நீங்க. 40. காச்சல் வரும் அறிகுறிதோன்றினால். 41. இரணத்தில் இரத்தம் ஒழுகினால் நிறுத்த. 42. வாந்தியை நிறுத்த. 43. தனுர்வாதம் கணமாக. 44. வாதவீக்கம் குணமாக. 45. மலேரியாக் காய்ச்சல் குணமாக. 46. வாய்வுப் பிடிப்பு குணமாக. 47. இருமல் குணமாக. 48. இன்புளூயன்சா காய்ச்சல் குண்மாக. 49. காய்ச்சலில் ஏற்படும் வாந்தியை நிறுத்த. 50. இளைப்பு குணமாக. 51. பற்று, படர்தாமரை குணமாக. 52. சிரங்கு குணமாக. 53. கோழை, கபக்கட்டு நீங்க.
|
Category: மருத்துவ குணம் | Added by: pandu
|
Views: 527 | Downloads: 0
| Rating: 0.0/0 |
| |
| | |
|
|