tamiltraditional.cf

Home | Sign Up | Log In
வெள்ளி, 2024-03-29, 0:57 AM
Welcome Guest | RSS
Site menu
Section categories
பழமொழி [2]
பொது அறிவு [4]
விடுகதைகள் [7]
சிறுவர் கதைகள் [25]
பாப்பா பாடல்கள் [10]
சிந்தனை துளிகள் [2]
விளையாட்டுக்கள் [0]
தெரிந்து கொள்ளுங்கள் [1]
ஆங்கிலம் கற்க [0]
யோகாசனம்
தமிழ்மொழி
உடல்நலம்
சிறுவர் உலகம்
பெண்கள் உலகம்
Home » Files » சிறுவர் உலகம் » விடுகதைகள் [ Add new entry ]

அது என்ன ? ... மேலும்
2012-12-11, 7:21 PM

1. வாயில்லை புத்திமதிகள் சொல்வான்
    காலில்லை கடந்தும் செல்வான்
    கையில்லை உளங் காட்டிக் கொள்வான்
    உயிரில்லை ஒரு நாளும் சாக மாட்டான். - அது என்ன?

2. மேலே பறக்கும் பருந்தல்ல
   கட்டுண்டு இருக்கும் மாடல்ல
   அழகான வாலுண்டு குரங்குமல்ல - அது என்ன?

3. ஊர் உண்டு மக்களில்லை
   மலையுண்டு மரங்களில்லை
  ஆறுண்டு நீரில்லை
  அணையுண்டு கல்லில்லை
  வழி உண்டு வாகனமில்லை
  வண்ணமுண்டு உயிரே இல்லை - அது என்ன?

4. குடிக்கத் தண்ணீர் உண்டு
   குளிக்கத் தண்ணீர் இல்லை - அது என்ன?

5. மனிதன் போடாத பந்தலிலே
   மலர்ந்து கிடைக்குது பூ - அது என்ன?

6. காலும் கையும் உண்டு, விரல் இல்லை
   முதுகு உண்டு, தலை இல்லை
   தன்னைத் தேடி வந்தோரைச் சுமப்பான். - அது என்ன?

7. ஆற்றைக் கடக்கும், அக்கரை போகும்
    தண்ணீரில் கலக்காது, தானும் நனையாது - அது என்ன?

8. வெயிலில் காயும்
    மழையில் நனையும்
   அண்டி வருவோர்க்கு
  அடைக்கலமும் தரும் - அது என்ன?

9. யாரும் செய்யாத கதவு
   தானே திறக்கும் தானே மூடும் - அது என்ன?

10. கனலைப் பிடித்து கண்ணீர் வடிக்கும்
     கடைசியில் கரைந்தும் போகும் - அது என்ன?

 

விடைகள்:

 

1. புத்தகம்

2. பட்டம்

3. தேசப்படம்

4. தேங்காய்

5. நட்சத்திரம்

6. நாற்காலி

7. பாலம்

8. குடை

9. கண் இமை

10. மெழுகுவர்த்தி.

 

 

 

 

 

Category: விடுகதைகள் | Added by: pandu
Views: 1150 | Downloads: 0 | Rating: 4.0/1
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]
Log In
Block title
Search
Polls
Rate my site
Total of answers: 49
live traffic feed

Copyright MyCorp © 2024 | Make a free website with uCoz